திருவனந்தபுரம்: உச்சக்கட்டப் பாதுகாப்புடன், குடும்பத்துடன் முதல்வர் வசிக்கும் வீட்டில் எப்படி பாலியல் பலாத்காரம் நடைபெற முடியும் என சரிதா நாயருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் உம்மன் சாண்டி குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் சூரியதகடு விவகாரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி, தன்னிடம் அத்து மீறி நடந்ததாக சரிதா நாயர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறி 25 பக்கங்களைக் கொண்ட கடிதத்தை கடந்த ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கேரளத்தில் செயல்படும் இரு மலையாள தொலைக்காட்சிகள் வெளியிட்டன.
இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான தகவலைக் கூறியதாக சரிதா நாயர் மீதும், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட 2 மலையாளம் தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றித்தில் உம்மன் சாண்டி தொடர்ந்துள்ள வழக்கு விவரம்:
முதல்வர் தனது அதிகாரபூர்வ இலத்தில், உச்சக்கட்ட பாதுகாப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் இல்லத்தில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றதாக கூறுவது என்பது பொது அறிவு இல்லாததையேக் காட்டுகிறது.
மேலும், மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் நோக்கிலேயே சரிதா நாயர் எழுதியதாக கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரிதா நாயார் இதற்கு முன்பாக பலமுறை அளித்துள்ள தொலைக்காட்சி நேர்காணலில் ஒருபோதும் நான் அவரிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்ததாக கூறவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சரிதா நாயர் மீதும் செய்தியை வெளியிட்டவர்கள் மீதும் அவதூறு வழக்குப் பதிவு செய்வதோடு, குற்றசதியில் ஈடுபட்ட வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் சாண்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


