சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்பட்ட இளைஞர்கள் தாயகம் திரும்பினார்
சவூதியில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் அந்நாட்டில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.


சவூதியில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் அந்நாட்டில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.
சவூதியில் வேலைக்குச் சென்ற இந்திய இளைஞர்கள், அவரது முதலாளியால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவிய நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் அவர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சவூதியில் வேலை இருப்பதாகக் கூறி ஏஜென்ஸி மூலம் வேலைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு முதலாளியால் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஒரு இளைஞரை கட்டையால் கண்மூடித்தனமாக சவூதி நபர் ஒருவர் தாக்கும் காட்சி வாட்ஸ் அப் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது பற்றிய செய்தி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பைஜு, அபிலாஷ், விமல் குமார் ஆகிய இளைஞர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களை நேரில் பார்த்த உறவினர்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...