சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருப்பதியிலிருந்து திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க புதிய நடைபாதை

ஒசூர், ஜூன் 27: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இதுவரை 3,800 படிக்கட்டுகள் வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து 9 கி.மீ. தூரம், குறைந்தது 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும்.  இந்நில

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:27 pm

டி.ஞானபிரகாசம்

ஒசூர், ஜூன் 27: திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இதுவரை 3,800 படிக்கட்டுகள் வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து 9 கி.மீ. தூரம், குறைந்தது 4 மணி நேரம் நடந்து செல்ல வேண்டும்.

 இந்நிலையில், ஸ்ரீவெங்கடாசலபதி நடந்து சென்றதாகக் கூறப்படும் பாதையில் 1 மணி நேரத்தில் திருமலைக்கு செல்லும் புதிய நடைபாதையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதுப்பித்துள்ளது. இப்பாதை 2,000 படிக்கட்டுகளும், 3 கி.மீ. தூரமும் கொண்டது. கடந்த ஜனவரி முதல் இந்தப் பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 திருமலையில் சுயம்புவாகக் காட்சியளிக்கும் ஸ்ரீவெங்கடாசலபதியை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஏழு மலைகளைக் கடந்து சுவாமியைத் தரிசிக்க, பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர்.

 தீவிர பக்தர்களும், நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பக்தர்களும் திருப்பதியில் இருந்து நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்கின்றனர்.

  இந்த நடைபாதை திருமலை டோல்கேட் (அலிபிரி) எனும் இடத்தில் தொடங்குகிறது. இதுவரை 7 மலைகள் வழியாக 3,800 படிக்கட்டுகள் ஏறி, 9 கி.மீ. தூரம் கடந்து திருமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தப் பாதையில் காளி கோபுரம் அருகே செங்குத்தாகவும், சில இடங்களில் சமவெளியாகவும் உள்ளது.

  பத்மாவதியை ஸ்ரீவெங்கடாசலபதி திருமணம் செய்தபிறகு, அகஸ்தீஸ்வர முனிவரின் வேண்டுதலுக்கு இணங்க சீனிவாசமங்காபுரத்தில் சிறிது காலம் தங்கி இருந்தாராம்.

திருமணம் முடிந்து மலை ஏறக் கூடாது என்ற முனிவர் சொன்னதற்காக இங்கிருந்தார். பின்னர் ஸ்ரீவெங்கடாசலபதி ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் சென்றதாக திருப்பதி திருமலை தேவஸ்தான புராணம் கூறுகிறது.

 இந்த ஸ்ரீவாரிமெட்டு வழியாக ஸ்ரீவெங்கடாசலபதி திருமலைக்குச் சென்ற பாதை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தப் பாதை 7-வது மலை அடிவாரத்தில் தொடங்கி, திருமலையில் பழைய உட்லன்ட்ஸ் ஹோட்டல் அருகே கோவிலுக்குப் பின்புறம் நிறைவடைகிறது. இது 3 கி.மீ. தூரமும், 2,000 படிக்கட்டுகளையும் கொண்டது.

 நடைப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் இந்தப் பாதையை தேவஸ்தானம் புனர் நிர்மாணம் செய்தது.

 இந்த ஸ்ரீவாரி மெட்டுக்கு திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து இலவச பஸ் வசதியை தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆட்டோ மூலமாகவும் செல்லலாம்.

 இந்தப் பாதையிலேயே ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், அன்னமய்யா உள்ளிட்ட மகா பக்தர்களும் திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.