பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இன்றைய மருத்துவ சிந்தனை - 24.11.2016 கொத்தமல்லி

கொத்தமல்லியோடு, மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:47 pm

கோவை பாலா

கொத்தமல்லி

கொத்தமல்லியோடு, மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் . ரத்த அழுத்தமும் சீராகும்.

கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.

கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி மற்றும் துளசியைக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லி, சீரகம் (2 ஸ்பூன் ) - இரண்டையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தலைவலி குணமாகும்.

கொத்தமல்லியைப் பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்

அன்புடன்
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.