புதுடில்லி, மார்ச், 29 - வரதட்சிணை தடுப்புச் சட்டத்தைக் கடுமையாக்குவதற்கான பிரேரணைகள் குறித்து மத்திய அமைச்சகங்களிடையே நடக்கும் விவாதங்களில் பரிசீலிக்கப்படுகிறது என்று தெரிகிறது.
உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், மற்றும் இதர அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த விவாதங்களில் பங்கு கொள்கிறார்கள்.
வரதட்சிணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு பத்து வருடங்கள் ஆகின்றன. இச்சட்டத்தின் கீழான குற்றங்கள் பிடியாணை யில்லாமல் பிடிக்கத்தகாத குற்றங்கள் ஆகும். அது மட்டுமின்றி, வரதட்சிணை தருகின்ற மணப்பெண்ணின் பெற்றோர் புகார் செய்ய விரும்புவதில்லை. எனவே வரதட்சிணை தடுப்புச் சட்டம் அநேகமாக ஏட்டளவிலேயே இருந்து வருகிறது.
வரதட்சிணையைப் பெற்றுக் கொள்ளுவதை பிடியாணை வேண்டாக் குற்றமாக ஆக்குவது, தற்போதைய விவாதங்களில் பரிசீலிக்கப்படும் பிரேரணைகளில் ஒன்று என்று தெரிகிறது.
கொடுக்கப்படுகின்ற அல்லது பெறப்படுகின்ற தொகை திருமணத்தை உத்தேசித்து கொடுக்ககப்படுகின்றது அல்லது தரப்படுகிறது என்று பிராசிகியூஷன் தரப்பினர் கோர்ட்டில் நீருபிக்க வேண்டும் என்பது தற்போதுள்ள நிலை. இதை மாற்றலாம் என்று கருதப்படுகிறது. கொடுக்கப்பட்டது அல்லது பெறப்பட்டது என்பதை மட்டும் பிராஸிகியூஷன் தரப்பினர் நிரூபித்தால் போதும் என்றும், திருமணத்திற்காகக் கொடுக்கப்படவில்லை அல்லது பெறப்படவில்லை என்பதை நிரூ பிக்கும் பொறுப்பு எதிரியினுடையதாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
த. நா. வருமான வரி சோதனை பிரிவு பலப்படுத்தப்படுகிறது
சென்னை, மார்ச்: 29 - தமிழ் நாட்டில் வருமான வரிச் சோதனைகளை வலுப்படுத்த வரி ஏய்ப்பு சோதனைப் பிரிவின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய வருமான வரி இலாகா முடிவு செய்துள்ளது. தற்போது இந்தப் பிரிவில் ஒரு துணை டைரக்டர் ஐந்து உதவி டைரக்டர்கள் இருக்கின்றனர். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து வருமான வரி சோதனைப் பிரிவு துணை டைரக்டர்களின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தி கூடுதலாக மூன்று உதவி டைரக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள் விஷயத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த இந்தச் சோதனைப் பிரிவு வலுப்படுத்தப்படுகிறது.
சோதனைப் பிரிவு துணை டைரக்டராக தற்போது கே.வி.ராஜன் இருக்கிறார். இன்னொரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் துணை டைரக்டராக ஏ.வி. ராவ் நியமிக்கப்படுகிறார். விவசாயம், வணிகம், தொழில் நகரங்களான மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் வருமான வரி ஏய்ப்பைத் தடுக்க இன்னொரு சோதனைப் பிரிவு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு உதவி டைரக்டரை நியமித்தாலும் கூட வருமான வரி மூலம் மத்திய அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ...
Summary
Consideration to amend and strengthen the Dowry Prohibition Act.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடங்கள்: எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் விண்ணப்பிக்கலாம்!

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



