பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசுவண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

19.6.1976: பிஎச்.டி. பட்டம் பெற புது நிபந்தனை

பிஎச்.டி. பட்டம் பெற எம்.பில். பட்டம் முடிப்பதை கட்டாயமாக்கி புது நிபந்தனை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

half century ago

19.6.1976 - Dinamani

Published On :19 ஜூன் 2026, 4:00 am IST

புதுடில்லி, ஜூன். 18 - பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்து "பிஎச். டி." (டாக்டர்) பட்டம் பெற வேண்டுமானால் அதற்கு முன்பாக "எம்.பில்" என்னும் பட்டத்தைப் பெற வேண்டும் என்று புது நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

"எம்.பில்" பட்டம் பெற்ற மாணவர்களே மேற்கொண்டு "பிஎச்.டி" பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக மானியக் கமிஷன் அறிவித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் அது அனுப்பியுள்ளது.

"எம்.பில்" பட்டம் பெறாமலே "பிஎச்.டி"க்கு மாணவர்களை அனுமதிக்க மற்றோர் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதன்படி "எம்.பில்" பட்ட ஆராய்ச்சிப் படிப்புக்கு "சம அளவு ஆராய்ச்சி" செய்திருப்பதாக மாணவர்கள் தக்க சான்று காட்ட வேண்டும்.

"எம்.பில்" பட்டத்தில், 'ஏ', 'பி' என்று இரு கிரேடுகள் வழங்கப்படும்; 'ஏ' கிரேடு பெறுபவர்களே மேற்கொண்டு "பிஎச்.டி" பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்ய அனுமதிக்கப்படுவர். ...

லெபானில் அமெரிக்கரை வெளியேற்ற போர்ட் கட்டளை

வாஷிங்டன், ஜூன். 18 - லெபனானில் நிச்சயமற்ற நிலைமை நிலவுவதால் அங்கிருந்து அமெரிக்கர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு பேரூத்திலுள்ள யு.எஸ். தூதரகத்துக்கு ஜனாதிபதி போர்ட் உத்தரவிட்டுள்ளார்.

லெபனானிலிருந்து தரை மார்க்கமாக கோஷ்டியாக அமெரிக்கர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அயல்நாட்டு இலாகா அதிகாரி கூறினார்.

பேரூத்தில் நிச்சயமற்ற நிலைமை நீடிப்பதால், இச்சமயத்தில் வெளியேற விரும்பும் யு. எஸ். பிரஜைகளை தரை மார்க்கமாக வெளியேற்ற ஏற்பாடு செய்யுமாறு யு. எஸ். தூதரகத்துக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.

அத்யாவசியமற்ற தூதரக அதிகாரிகள் மட்டுமே வெளியேறுகிறார்கள். நாட்டில் சமாதானம் காணும் முயற்சியில் உதவ தூதரகம் திறந்திருக்கும் என்றார். லெபனானில் 1400 அமெரிக்கர்கள் இருக்கிறார்கள்.

அயல்நாட்டு மந்திரி கிஷ்ஸிங்கருடனும், மற்ற உயர் அதிகாரிகளுடனும் போர்ட் லெபனான் நிலைமையை பரிசீலித்தார்.

கொலை செய்யப்பட்ட யு.எஸ். தூதர் மெலாய், பொருளாதார ஆலோசகர் ராபர்ட் ஆகியோரின் சடலங்களை கொண்டுவர விசேஷ தூதர் டீன் பிரவுன் ராணுவ விமானத்தில் டமாஸ்கசுக்குச் செல்கிறார். ...

Summary

19.6.1976: New condition for obtaining a Ph.D. degree.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.