தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காதல் மனைவியுடன் தகராறு: மதுபோதையில் மகன்களை கொன்று தந்தை தற்கொலை

மதுபோதையில் இரண்டு மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:19 am

ENS

மதுபோதையில் இரண்டு மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட்டாவில் வியாழக்கிழமை இச்சோகச் சம்பவம் நடந்துள்ளது. வெலகோடி ரமணா மூர்த்தி (35) என்பவருக்கு மதுப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் மனைவி மற்றும் உறவினர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிப்பழக்கம் காரணமாக தனது சொத்துக்களையும் இழந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ரமணா, புதன்கிழமை மதுபோதையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து தனது இரண்டு மகன்களையும் (பவானி நாக தினேஷ் (8) மற்றும் சாய் (7)) ஆகியோரை கழுத்தறுத்து கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அப்பகுதி போலீஸ் அதிகாரி ஸ்ரீநிவாஸ ராவ் உறுதிபடுத்தினார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோடிலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்த ரமணா, சிலகலூரிபேட்டாவில் உறவினரின் கடையில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.