பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வீரர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது: கர்நாடக முதல்வர் குமாரசாமி

ராணுவ வீரர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2019, 2:46 pm

ராணுவ வீரர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக்ததில் பாஜக 22 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்திருந்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாவது:

எடியூரப்பாவின் இந்த கருத்து அப்பாவி ராணுவ வீரர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. இது பாஜக-வால் நடத்தப்படும் மிக மோசமான அரசியல். ராணுவ வீரர்களின் மனைவிகளை விதவைகளாகவும், குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் ஆக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் கூட பாஜக மோசமான அரசியலில் ஈடுபடுகிறது. வேறு எந்த தலைவர்களும் இதுபோன்று காரணம் கூறியதில்லை, அதை வாக்குகளாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதில்லை என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.