லிஃப்டில் சிக்கிய 10 வயது சிறுவன் சாவு
10 வயது சிறுவன் லிஃப்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


10 வயது சிறுவன் லிஃப்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை அடுத்துள்ள புறநகர் பகுதியான மெட்செல் எனுமிடத்தில் இந்த சோகச் சம்பவம் செவ்வாய்கிழமை நடைபெற்றுள்ளது. அந்த சிறுவன் அதே அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த காவலர் நரசிம்மாவின் மகன் ஹேமந்த் குமார் என்று தெரியவந்துள்ளது.
சிறுவன் ஹேமந்த் குமார் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிஃப்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அதில் சிக்கிக்கொண்டதால் உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...