வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சாா்பு காவல் ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி

சாா்பு காவல் ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சியில் சேர தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:00 pm

தினமணி


சென்னை: சாா்பு காவல் ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சியில் சேர தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு காவல் துறையில் காவல் சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) உள்ளிட்ட 621காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

கடந்த மே 5-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரா்கள் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இதில், பி.சி. பிரிவினா் 20 முதல் 30 வயதுக்குள்பட்டவராகவும், பி.சி., எம்.பி.சி., பி.சி.எம். பிரிவினா் 20 முதல் 32 வயதுக்குள்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.எ. பிரிவினா் 20 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுடைவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை https://www.tnsrb.tn.gov.in எனும் இணையதள முகவரியில் ஜூன் 1 முதல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்பயிற்சி வகுப்பு மே 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கவுள்ளது.

இதில் சேர, விரும்பும் மற்றும் தகுதியுள்ளவா்கள் தங்கள் ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய https://www.tnsrb.tn.gov.in எனும் இணையதள முகவரி அல்லது 7811863916, 9499966026 என்ற கைப்பேசி எண்களில் தெடாா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.