கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அரசு போக்குவரத்துக்  கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் அறிவிப்பு: முழு விவரம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 800 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:31 am

தினமணி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 800 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் சுமார் 1484 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 203 ஓட்டுநர் காலி பணியிடங்களில் 60 சதவீதமான 122 ஓட்டுநர்களை மட்டும் பணியமர்த்தவும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அதே முறையில் ஓப்புதல் தந்க 800 பணியிடங்களில் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலி பணியிடங்களை மட்டும் நிரப்ப அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தற்போது 203 + 685 என 888 ஓட்டுநர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தித்தாளில் வெளியப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்களை இணைய வழி மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அரசு போக்குவரத்துக் கழக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தகுதி: ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.17,500 முதல் ரூ.56,200 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை இயக்குநர் தலைமையிலான தேர்வுக்குழு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னுரிமை: தகுதி, வயதுவரம்பு, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகுதித் திறன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விரைவில் அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாகும் என தெரிகிறது. 

நீண்ட ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடைபெறாத நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.