காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் 2016 தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாக. முருகுமாறன் வெற்றிபெற்றார்.
87 வாக்குகளில் இழந்த தொகுதியை பிடிக்க தற்போது காட்டுமன்னார் கோவில் (தனி) தொகுதியில் தொல்.திருமாவளவன் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
மக்களவை உறுப்பினராவது தனது கனவு எனக் கூறி வந்த தொல்.திருமாவளவன், தனது கனவை நிளைவாக்கும் வகையில் 3 முறை எம்.பி.யாக தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது கட்சியினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசிகவின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
மாநில அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும். கூட்டணிக் கட்சியின் அமைச்சரவையில் பங்கேற்பதற்காகவும் சட்டப் பேரவைத் தேர்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதாக தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட கட்சியின் பழைய நிர்வாகிகள் பலர் வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என மேலும் சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமாரபாளையம் : ஐந்தாவது வெற்றியை எதிர்நோக்கும் பி.தங்கமணி!

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

குன்னம் தொகுதி ஊரறிந்த ரகசியம்!

ஞாபகம் வருதே... புது தொகுதியின் முதல் எம்எல்ஏ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


