தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கவுள்ளது பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 10:48 am IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 பேர் கொண்ட பட்டியல் கொடுத்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. தலா 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட்(சிபிஐ) மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் (ஐயுஎம்எல்) ஆதரவை பெற தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த விசிக, சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் ஆகிய 4 கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து வியாழக்கிழமை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவுக்கு திமுக ஆதரவா?

தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால் திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுவை சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதனிடையே, அதிமுக ஆதரவு கேட்டதாகவும், அதுபற்றி மு.க. ஸ்டாலின் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இன்று நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரை சந்தித்து பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கப் போகிறாரா? அதிமுகவுக்கு திமுக ஆதரவு கொடுத்ததா? விசிக, இடதுசாரிகள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள்? என்ற கேள்விகள் தமிழ்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Summary

Is Edappadi Palaniswami meeting the Governor today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.