தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு!

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

டிடிவி தினகரன் - கோப்புப்படம்

Updated On :30 மார்ச் 2026, 8:18 am

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியில் இணைந்து அமமுக போட்டியிடவுள்ளது. அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

11 தொகுதிகளில், பூவிருந்தமல்லி (தனி) - ஏழுமலை, மன்னார்குடி - எஸ் காமராஜ் , சைதாப்பேட்டை - செந்தமிழன், மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, காரைக்குடி - தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் - ஞானசேகரன், திருச்சி மேற்கு - தொட்டியம் ராஜேசேகரன், ஒட்டப்பிடாரம் (தனி)- சுந்தர்ராஜன், பெரியகுளம் (தனி) - கதிர்காமு, நான்குநேரி - இசக்கிமுத்து, திருவையாறு - வேலுகார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முந்தைய தேர்தல்களில் அமமுக போட்டியிட்ட குக்கர் சின்னம் மீண்டும் கேட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Summary

Cooker Symbol Allotted to AMMK!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.