வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்வது எப்படி? என்பதைப் பற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (ஏப்.23) 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்குத் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளி நகர்களில் பணியாற்றுபவர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்குப் பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதால், பலரும் வாக்களிக்க முனைப்பு காட்டி வருகின்றன. மேலும், வாக்கு சதவிகிதத்தையும் உயர்த்தும் நோக்கில் வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டுகளைப் பெறாதோர் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, https://electoralsearch.eci.gov.in இணைய முகவரியிலோ அல்லது வாக்காளர் உதவி எண் செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தியோ தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் வாக்குச்சாவடி பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in இணையதளத்தில் சென்று இந்தியத் தேர்தல் ஆணைய எண், முகவரி அடிப்படையில், மொபை எண் அடிப்படையில் வாக்குச்சாவடி விவரங்களைப் பெறலாம்.

எடுத்துக்காட்டாக, தகவல்கள் தொடர்பான தேடலில் பெயர், உறவினர் பெயர், வயது, மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நமது வாக்குச்சாவடி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Summary
The Election Commission of India has issued guidelines on how voters can find out their polling station details.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க யாரும் வரவில்லை! நான்குனேரி அருகே வெறிச்சோடிய வாக்குச்சாவடி!
புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு! வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்பு!!

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடி! எங்கே?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


