தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

‘காங்கிரஸும் பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிஸா மக்கள் ஏழையாக இருப்பதற்கான காரணம்’

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :6 மே 2024, 5:50 am

ஒடிஸாவில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஜூன் 10-ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக வருகின்ற மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரசாரம் அம்மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெஹ்ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.

அப்போது பிஜு ஜனதா தளத்தை விமர்சித்து மோடி பேசியதாவது:

“ஒடிஸாவில் இரண்டு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று நாட்டில் சக்திவாய்ந்த அரசு அமைவதற்கு, மற்றொன்று ஒடிஸாவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவதற்கான மாற்றம். ஒடிஸாவில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமையவுள்ளது உங்களின் உற்சாகத்தில் தெரிகின்றது.

ஜூன் 4, பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள். அன்றைய தினம் பாஜகவின் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். புவனேஷ்வரில் ஜூன் 10-ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

ஒடிஸாவை பல ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. ஒடிஸாவில் தண்ணீர், விவசாயம், நீண்ட கடற்பரப்பு, கனிம தாதுக்கள், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் உள்ளன. இருப்பினும், ஒடிஸா மக்கள் ஏன் ஏழைகளாக உள்ளனர்?

காங்கிரஸும் பிஜு ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிஸா மக்களின் இந்த நிலைக்கு காரணம். பிஜு ஜனதா தளத்தின் சிறிய தலைவர்களும் பெரிய பங்களாக்களுக்கு சொந்தகாரர்களாக உள்ளனர்.” என்று விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.