எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 10:54 pm

இந்திய தேர்தல் ஆணையத்தால் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், பல்வேறு சட்டப் போராட்டங்களைக் கடந்து 38 வயதில் தனது வாக்குரிமையைப் பெற்றுள்ளார் இந்தியாவில் பிறந்த இலங்கைத் தமிழர் ஒருவர்.

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் நளினி (38), இந்த உரிமையைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது:

எனது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். இலங்கையிலிருந்து வந்து ராமநாதபுரம், மண்டபம் முகாமில் இருந்தபோது, 1985-இல் எனது பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர். நான், மண்டபம் முகாமில்தான் 1986-இல் பிறந்தேன். இந்தியாவில் பிறந்தாலும், இந்திய குடியுரிமை பெற முடியாத நிலையே இருந்தது.

முதன்முறையாக கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்தபோதுதான் சட்டச் சிக்கல் இருப்பது தெரியவந்தது. வழக்குரைஞர் உதவியுடன் கடவுச்சீட்டுக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினேன். ஓராண்டுக்கு மேலாக நடந்த சட்டப் போராட்டத்தின் பயனாக, எனக்கு கடவுச்சீட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2022-ஆம் ஆண்டு கடவுச் சீட்டு பெற்றேன்.

அதை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அடையாள அட்டைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திடம் இணையவழியில் விண்ணப்பித்தேன். எனது, விண்ணப்பம் மற்றும் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்து தேர்தல் ஆணையமே அஞ்சல் வழியில் எனக்கான வாக்காளர் அடையாள அட்டையை அனுப்பியுள்ளது.

2023-ஆம் ஆண்டே வாக்காளர் அட்டையைப் பெற்றிருந்தாலும் முதன்முதலாக 2024 மக்களவைத் தேர்தலில்தான் எனது வாக்குரிமையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

இவரைப் பின்பற்றி முகாமில் வசிக்கும் மேலும் சிலர் வாக்காளர் அட்டை பெற முயற்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.