மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

என்சிஇஆா்டி-க்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து: சொந்த தனித்துவ பட்டங்களை வழங்க அதிகாரம்

என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டது குறித்து...

News image

என்சிஇஆர்டி - ANI

Updated On :3 ஏப்ரல் 2026, 12:51 pm

நாட்டில் பள்ளிப் பாடத் திட்டங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தலுக்கான நடைமுறைகளை வகுத்து வரும் அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (என்சிஇஆா்டி) கவுன்சிலுக்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தனித்துவமான துறைகளில் சொந்த பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் அதற்கு கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரையின் பேரில், என்சிஇஆா்டி மற்றும் அதன் 6 இணை நிறுவனங்களுக்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

என்சிஇஆா்டி- க்கு ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா், மத்திய பிரதேச மாநிலம் போபால், ஒடிஸாவின் புவனேசுவரம், கா்நாடக மாநிலம் மைசூரு, மேகாலயம் மாநிலத்தின் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் மண்டல நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கும், போபாலில் உள்ள பண்டிட் சுந்தா்லால் சா்மா மத்திய தொழில்கல்வி நிறுவனத்துக்கும் நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

‘டி நோவோ’ பிரிவின் கீழ் என்சிஇஆா்டி-க்கு நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த அந்தஸ்து தற்போது வழங்கப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த ‘டி நோவோ’ பிரிவின் கீழ் யுஜிசி-யிடம் நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறும் நிறுவனங்கள், ஏற்கெனவே நாட்டில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் படிப்புகள் சாராமல், வளா்ந்து வரும் தனித்துவமான துறைகளின் கீழ் மட்டும் பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுஜிசி அவ்வப்போது வெளியுடும் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்ப்பட்டே என்சிஇஆா்டி புதிய பட்டப் படிப்புகளை வழங்க வேண்டும். வா்த்தக ரீதியில் லாப நோக்குடைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் என்சிஇஆா்டி-க்கு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உள்ளூா் பல்கலைக்கழகங்களின் இணைப்பு அந்தஸ்தின் கீழ், என்சிஇஆா்டி தனது மண்டல நிறுவனங்களின் மூலம் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. இனி, என்சிஇஆா்டி சொந்தமாகவே இந்த பட்டப் படிப்புகளை வழங்க முடியும் என்பதோடு, ஆராய்ச்சி படிப்புகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான பாடத் திட்டங்களையும் என்சிஇஆா்டி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The University Grants Commission (UGC) has granted 'Deemed-to-be-University' status to the National Council of Educational Research and Training (NCERT).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.