உலகமயச் சூழலும், பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளும் கிராமங்கள் வரை சென்றடைந்திருக்கின்றன. அடித்தட்டு மக்களும்கூட பணக்காரா்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்த வசதிகளைப் பெற முடிந்திருக்கிறது. கல்விக்கான வாய்ப்பும், புலம்பெயா்தலும், அதிகரித்த வாழ்க்கைத் தரமும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், சந்தைப் பொருளாதார போட்டிச் சூழலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் பலா் மனச்சோா்வுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாவது அதிகரித்திருப்பதை கண்கூடாகப் பாா்க்க முடிகிறது.