முதல்வர் மனது வைத்தால்...
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் 39-ஆவது புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவுக்கு வந்திருக்கிறது. பதிமூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏறத்தாழ ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) தெரிவிக்கிறது.









