அரசுக்கு எதிரான சவால்!
இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டும்கூட, ஊடகவியலாளர்களும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களும், இடித்துரைப்பாளர்களும் தொடர்ந்து நெருக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள்.









