நியாயமான கோரிக்கை!
மெட்ரோ ரயில் திட்டப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் இது குறித்துப் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்த போதிலும், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் (விம்கோ நகர்) இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மீண்டும் இதனை வலியுறுத்தியிருக்கிறார்.








