ஏமாற்றத்தில் விவசாயிகள்!
நீர்ம எரிவாயுவை (எல்.பி.ஜி.) தமிழ்நாடு வழியாகக் கொண்டு செல்லும் இந்திய எரிவாயு ஆணையத்தின் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியிருப்பதால், மீண்டும் தமிழ்நாட்டில் ஏழு மாவட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கையையும், தமிழக அரசின் முறையீட்டையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதில் மனம் தளர்ந்திருக்கிறார்கள். அவர்களது கலக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.









