மனுவில் முன்னிலைப்படுத்த வேண்டிய விவகாரங்கள் இரண்டுதான். முதலாவது, இரண்டு தரப்புகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், தனித்தனியாக நடத்தியதாக பெருமாள் முருகனுடன் இருந்த வழக்குரைஞரே பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மாவட்ட நிர்வாகம் ஏன் அவ்வாறு செய்தது? இரு தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படவில்லையே, அது ஏன்? இரண்டாவது, பெருமாள் முருகன் எழுதிய நூல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்ப்பு ஏற்படக் காரணம் அதன் பின்னணியில் சில அமைப்புகள் செயல்பட்டிருப்பதுதான். ஆகவே, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.