சாத்தானின் கவிதைகள் எழுதியதால் பத்ஃவா அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய கதை அங்கதச் சுவை மட்டுமே. அதேபோன்று, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக் எழுதிய, "என் பெயர் சிவப்பு' என்ற நாவல், "ஓவியக் கலை இறைவனின் படைப்பை மட்டுமே புகழ வேண்டும், அது கேளிக்கையாக மாறக்கூடாது' என்கின்ற வெறியால் நிகழும் கொலை பற்றியதுதான். நாவல் முன்வைக்கும் விமர்சனம் மதத்துக்கு எதிரானது அல்ல. அப்படியே இருந்தாலும் அதை எழுதியவரின் கருத்து என்று கருதி ஒதுக்கிவிடுவது கண்ணியமே தவிர, அதை விமர்சனமாக்குவதோ, மத உணர்வு பாதிக்கப்பட்டதாக போராட்டத்தில் இறங்குவதோ துப்பாக்கி முனையில் பதிலளிக்க முற்படுவதோ பிரச்னைக்கு விடையாகாது.