தொழில் துறைக்கு தனியாக மின் கம்பி, வீட்டு இணைப்புகளுக்கு தனியாக மின் கம்பி என்று அமைக்கப்படாமல், வீடுகளுக்கு பகலில் இரண்டு மணி நேரம் மின் தடை ஒரு பொருட்டல்ல என்கிற மக்கள் மனநிலை உருவாகாமல், விவசாயத்துக்கு இலவச மின்சாரப் பயன்பாட்டை மீட்டர் பொருத்தி அளவிடவும், நிலக்கரி விலை உயர்வுக்கு ஏற்ப மாறுபடும் மின் உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப மின் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை உருவாகாமல், மின்சார வழித்தட இழப்பு 18% ஆக இருப்பதை ஒற்றை இலக்கமாக குறைக்காமல், மின் வாரியம், மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் விபத்து, நட்டங்களுக்கு அதிகாரிகளையும் மின் வாரிய ஊழியர்களையும் பொறுப்பேற்கச் செய்யாமல் மின் வாரியத்தின் நட்டத்தை போக்குதல் என்பது சாத்தியமல்ல.