தமிழகத்தைப் பொருத்தவரை, எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்படும் அத்தனை கட்சிகளும் பலவீனமாகக் காட்சி அளிக்கின்றன. அ.தி.மு.க.வின் பலவீனத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நிலையில் எந்தவொரு கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வையும் இணைத்துக் கொண்டு "மெகா' கூட்டணி அமைத்தாலும்கூட, அ.தி.மு.க.விற்குப் பெரிய அளவில் சவாலாக இருக்குமா என்பது சந்தேகம்தான். அரசியல் ரீதியாக சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு ஜெயலலிதாவிற்கோ, அ.தி.மு.க.விற்கோ பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி விடாது என்றுதான் தோன்றுகிறது.