இவர்கள் தூக்கிலிடப்படக் கூடாது என்று சிலரும், தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று சிலரும், இந்தியச் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிலரும் கோரிக்கைகளை முன்வைத்த வேளையில், இவர்கள் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப் படுவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அது நடந்திருக்கிறது. இதற்காக, குரல் கொடுத்தோருக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்றி சொல்வதோடு நின்றுவிட முடியாது. இலங்கை அதிபர் ராஜபட்ச விரைவில் நடக்க இருக்கும் தேர்தலில் இதை தனக்குச் சாதமாக மாற்ற முனைவார் என்றாலும்கூட, இலங்கை அரசுக்கும் நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.