தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 23,60,719 பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். ஆனால் 1995 முதல் 2014 வரை 8 லட்சம் பேர் ரூ.235 கோடி மதிப்புக்குப் பயனடைந்துள்ளனர். விபத்து, இறப்பு மற்றும் ஈமச் செலவுக்காக பணம் பெற்றவர்கள் வெறும் 1,579 பேர் மட்டுமே. மகப்பேறு உதவித்தொகை பெற்ற பெண் தொழிலாளர்கள் 11,413 பேர் மட்டுமே. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு குறைவான பெண் தொழிலாளர்கள்தான் தாய்மை அடைந்தார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. திருமண உதவி பெற்றவர்களும்கூட 87,201 பேர் மட்டுமே. இயற்கை மரணத்துக்காக உதவித்தொகை பெற்றவர்கள் 43,164 பேர் மட்டுமே.