தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் மருத்துவர்களை நியமிப்பதில்லை. மிகச் சிறந்த, திறமைவாய்ந்த மருத்துவர்களையே நியமிக்கிறது. அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவும் தயங்குவதில்லை. ஆகவேதான், திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்கள். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதல்ல விஷயம். அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தரமான சிகிச்சை, திறமையான மருத்துவர்களால் அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.