இது இன்றைய தேவை!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தொடங்கி வைத்துள்ள "தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்ட'த்துக்கு ("ராஷ்ட்ரீய கிஷோர் ஸ்வாஸ்த்ய கார்யக்ரம்') அதிக கவனமும், போதிய நிதிஒதுக்கீடும், முறைகேடுகள் இல்லாதபடி கண்காணிப்பும் இருக்குமேயானால், அடுத்த இளம் தலைமுறை உடலாலும் மனதாலும் நோயற்ற சமூகமாக உருவெடுக்கும்.










