சில முக்கியமான கடைசிநேர முடிவுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தேர்தல் பிரசாரத்திற்கு மிகவும் உதவும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. புதிதாக 54 கேந்திரீய வித்யாலயாக்களைத் தொடங்குவது, தில்லி மாநகரத்தில் ஆறு வழிச் சுற்றுப்பாதை அமைப்பது, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்துவது, சுகாதாரம், சுற்றுலா, நீர் மேலாண்மை, மனிதவள மேம்பாடு, விவசாயம் போன்ற துறைகள் தொடர்பான பல புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது என்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக பல திட்டங்களும், கோரிக்கைகளும் காத்துக் கிடக்