மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2011இல் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள 8,000 பெரிய, சிறிய நகரங்களில் 160 நகரங்களில் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. அதிலும், 8 பெரு நகரங்களில் மட்டும்தான் நவீனமயமாக்கப்பட்ட முழுமையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. நாளென்றுக்கு 40,000 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகும் நிலையில், நாளென்றுக்கு 8,000 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பதற்கான வசதிதான் இருக்கிறது. விளைவு? பெரும்பகுதி கழிவுநீர் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் விடப்படுகிறது.