நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்திருப்பதால், அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இறக்குமதி செய்ய முடியும் என்றாலும், அவற்றின் விலை தற்போது சர்தேச அளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கி வந்து, மின்உற்பத்தி செய்து, குறைந்த விலையில் மின்சாரத்தை மக்களுக்கு வழங்கினால் மின்வாரியங்களுக்கு மிகப்பெரும் நட்டம் ஏற்படும். ஏற்கெனவே மின்நிறுவனங்கள் அனைத்தும் பெரும் நட்டத்தில் இருக்கும்போது இது சாத்தியமே இல்லை. ஆகவே இந்தியா