இந்திய சிறைச்சாலைகள் இப்போதே நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் 123 மத்திய சிறைச்சாலைகளும், 333 மாவட்ட சிறைச்சாலைகளும், 809 துணை சிறைச்சாலைகளும், 19 பெண்கள் சிறைச்சாலைகளும், 44 திறந்தவெளி சிறைச்சாலைகளும், 30 சிறப்பு சிறைச்சாலைகளும், 21 சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளும் மற்றும் வேறு வகையான மூன்று சிறைச்சாலைகளும் உள்ளன. 3,32,782 கைதிகளை வைத்துக் கொள்ளும் சக்திதான் இந்த சிறைச்சாலைகளுக்கு உள்ளது. அதில் விசாரணைக் கைதிகள் மட்டுமே 2,04,480 பேர் என்றால், சிறைச்சாலைகள் நிரம்பி வழியாமல் என்ன செய்யும்?