நிலஉச்சரவரம்புச் சட்டம், பூமிதான இயக்கம் ஆகியவற்றை லட்சியக் கனவு நிறைவேறியதாகக் கொள்ளலாமே தவிர, வெகுஜனக் கனவு நிறைவேறியதாகக் கொள்ள முடியாது. இவ்வாறாக நிலம்பெற்ற விவசாயிகளும்கூட, இந்த நிலத்தைத் தொடர்ந்து தங்கள் வசம் வைத்துள்ளார்களா என்பதேகூடச் சந்தேகம்தான். பஞ்சமர் நிலங்கள் எவ்வாறு மற்றவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பத்திரங்கள் மாற்றப்பட்டனவோ அதேபோன்று பல சம்பவங்களில் நிலமற்ற ஏழைகள், கொஞ்ச காலத்துக்கு நிலத்தைப் பயன்படுத்தியதோடு சரி. மீண்டும் அவர்கள் நிலமற்ற விவசாயிகளாக மாறும் சரித்திரம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.