எதிர்கட்சித் தலைவர் திரு. பி.ஜி.கருத்திருமன், அவரைத் தொடர்ந்து திருவாளர்கள். எ. பாலசுப்பிரமணியன், டாக்டர் எச்.வி.ஹாண்டே, ஏ. ஆர்.மாரிமுத்து, டாக்டர் ஹபிபுல்லா பெய்க், கே.பூவராகன், ம. பொ. சிவஞானம்,க. ர, நல்லசிவன் ஆகியோர் தமது கட்சிகளின் சார்பில் அத்தீர்மானத்திற்குத் திருத்தத் தீர்மானங்களை முன்மொழிந்தனர். அவற்றை முறையே திருவாளர்கள் கே. விநாயகம், என். சங்கரய்யா, கே. சீமைச்சாமி, கோ. பாரதிமோகன், எம். அப்துல்கபூர் சாகிப், ப.மகாதேவன், ஆ. கு. சுப்பையா ஆகியோர் வழிமொழிந்தனர். மாண்புமிகு முதல்வர் அண்ணாவும் தனது திருத்தத் தீர்மானத்தை அவையில் முன்மொழிந்தார்.