மேலும் இவர் 2013ம் ஆண்டு கிணற்றில் விழுந்த ஓர் பெண் மற்றும் சிறுமியை கிணற்றில் குதித்து காப்பற்றியதற்காக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். எச்ஐவி பாதித்த 5 குழந்தைகளுக்கு ரூ. 12,500 கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளார். மேலும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை விளக்கி சொந்த பணத்தில் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிப்பது, கருவேல மரங்களை அகற்றுவது, ஊருணிகளை தூர்வாருவது, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது என தனது ஓய்வு நேரத்திலும் ஓயாமல் சமுதாயப் பணியாற்றி வருகிறார்.