தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கருக்கலைப்புக்காக 3 ஆண்டுகளில் நீதிமன்றக் கதவைத் தட்டிய 200 பேர்: பெரும்பாலானோர் யார் தெரியுமா?

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி கேட்டு நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பெண்களின் எண்ணிக்கை 200 என்று புள்ளி விவரம் காட்டுகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:15 am

ENS


புது தில்லி: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி கேட்டு நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய பெண்களின் எண்ணிக்கை 200 என்று புள்ளி விவரம் காட்டுகிறது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கடந்த 3 ஆண்டுகளில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி கோரிய 194 ரிட் மனுக்களில், பெரும்பாலான பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களாக இருப்பதுதான் இந்திய திருநாட்டில் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இது குறித்து ஆய்வு நடத்திய பிரதிக்யா கமோர் பாலின சமன் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு அமைப்பு, 2016 ஜூன் மாதம் முதல் 2019 ஏப்ரல் மாதம் வரை  உச்ச நீதிமன்றத்தில் 21 ரிட் மனுக்கள் உட்பட உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் உட்பட 194 பெண்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான அனைத்து ரிட் மனுக்களுமே 20 வாரத்துக்கும் மேலான கருவை கலைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டவையே. இதில் 5 மனுக்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுடையதும், 15 பெண்கள், கருவின் வளர்ச்சி சரியில்லாததால் கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய மனுக்களுமாக இருந்தன. இதில் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 15 மனுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

அனுமதி மறுக்கப்பட்ட 5 மனுக்களில் தொடர்புடைய பெண்களுக்கு 26-28 வாரக் கரு இருந்ததால் கருக்கலைப்பு செய்தால் பெண்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் மனு மீது அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

20 வாரத்துக்கு உள்ளான கருவைக் கலைக்க மட்டுமே மருத்துவ கருக்கலைப்பு விதி அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்னவென்றால்..

  • உச்ச நீதிமன்றத்தில் 21 மனுக்களும், உயர் நீதிமன்றங்களில் 173 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 139 பேருக்கு கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 29 பெண்களுக்கு கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • மும்பை உயர் நீதிமன்றத்தில்தான் அதிகபட்ச மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • அதிகபட்ச மனுக்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டவை.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.