மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதய வால்வு, ரத்தக்குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் குறைந்தது 9 பேர்களுக்கு வாழ்வளிக்க முடியும். உடல் உறுப்புமாற்று சிகிச்சை ஆணையத்திற்காக தனியாக இணைய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புதானம் செய்ய விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக மிக எளிதாக பதிவு செய்து கொள்ளும் செயலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கில் மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அனைத்தும் 100 சதவீத வெற்றியுடன் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை 24 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிறப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ளன.