பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

உயிர்க்கொல்லியாக மாறிய நெடுஞ்சாலைகள்: சாலை விபத்துகளால் ஜனவரியில் மட்டும் 993 மரணம்

வாகன  நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அகலமான சாலைகள் அமைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், குறுகலான சாலைகளைவிட அகலமான சாலைகளில்தான் அதிக விபத்துகள் நேரிடுகின்றன 

News image
Updated On :4 மார்ச் 2019, 10:36 am


வாகன  நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அகலமான சாலைகள் அமைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், குறுகலான சாலைகளைவிட அகலமான சாலைகளில்தான் அதிக விபத்துகள் நேரிடுகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றனவே.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்தினால் நேரிட்ட உயிரிழப்பு எத்தனை தெரியுமா? 993 பேர் மரணித்திருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

இதில் குறுகலான சாலைகளை விட, அகலமான சாலைகளில்தான் அதிக விபத்துகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 70 சதவீதம் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நடந்துள்ளது. அதாவது ஜனவரி 2019ல் தமிழகத்தில் நடந்த 5,173 சாலை விபத்துகளில் 993 பேர் இறந்துள்ளனர். (இதே ஜனவரி மாதம் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,189 பேர் உயிரிழந்தது வேறு கதை.)

993 பேரில் 360 பேர் தேசிய நெடுஞ்சாலையிலும், 332 பேர் மாநில நெடுஞ்சாலையிலும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மரணித்தனர்.

அதாவது மற்ற சாலைகளை விட அதிக அகலமான 20 - 60 அடி அகலமுள்ள மாநில நெடுஞ்சாலைகளிலும், 60 - 200 அடி அகலமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் தான் சாலைவிபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. சாதாரண உள்ளூர் சாலைகள் 10 - 30 அடி மட்டுமே.

இதற்கு அதிகாரிகள் கூறும் காரணம் என்னவென்றால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே என்கிறார்கள். பல்வேறு சாலை விதி மீறல்களும் இந்த விபத்துகளுக்கு பின்னணியில் இருந்தாலும், சாலையில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்காமல், விபத்துகளினால் உயிரிழப்பைக் குறைப்பது இயலாது என்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், பல இடங்களில் தடுப்பு இல்லாமல் திறந்திருப்பதால், உள்ளூர் மக்கள் அந்த சாலையைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற விபத்துகள் அதிகம் நிகழ்வதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

கடந்த 20 ஆண்டுகளில் சாதாரண புறநகர்ச் சாலைகளாக இருந்த 2,500 கி.மீ. சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டனவே தவிர, அவற்றுக்கு சாலை தடுப்புகளோ, இருபுற சாலை தடுப்புகளோக் கூட இல்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.

மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்து விசாரணை நடத்தும் போது கிடைக்கும் முதல் தகவல், அந்த சாலையில் சாலைத் தடுப்புகள் கூட இல்லாமல் இருக்கிறது என்ற விஷயமாகத்தான் இருக்கிறது. இது குறித்து மாநில அரசுக்குத் தெரிவித்திருப்பதாக நெடுஞ்சாலைத் துறை கூறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.