புராரியில் ஒரே நாளில் சந்தாவத் குடும்ப உறுப்பினர்களான 77 வயது நாராயன் தேவி, அவரது மகள் 57 வயது பிரதிபா, அவரிடைய மகன்களான பாவ்னேஷ் (50) மற்றும் லலித்(45), பாவ்னேஷின் மனைவி சவிதா (48), அவர்களுடைய மூன்று வாரிசுகளான மேனகா (23), நீத்து(25) மற்றும் தீரேந்திரா (15), லலித்தின் மனைவி டினா(42) அவர்களுடைய 15 வயது மகன் துஷ்யந்த், பிரதிபாவின் மகள் ப்ரியங்கா என் மொத்தம் 11 பேர் ஒரே நாளில் தூக்கில் தொங்கி உயிரிழந்தனர். இவ்வழக்கு முதலில் தற்கொலையாகக் கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள உளவியல் பிரேதப் பரிசோதனை அறிக்கை இது தற்கொலையல்ல விபத்து என்று கண்டறிந்திருப்பது பெரும் அதிர்ச்சி.