குழந்தைகள் பாலியல் போகப்பொருட்கள் அல்ல. 8 வயது என்பது பறக்கச் சிறகுகள் இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டு அம்மாக்களும், அப்பாக்களும் சொல்லும் சின்னச் சின்னப் பொய்க்கதைகளைக் கூட உண்மையென நம்பி கோலிக் குண்டு கண்களை அகல விரித்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டு, நாய்களுக்கும், பூனைகளுக்கும், காகங்களுக்கும், வண்டுகளுக்கும், அறியாத புதிய மனிதர்களுக்கும் பயந்து கொண்டு அம்மாக்களின் புடவைத் தலைப்பின் பின்னோ, அப்பாக்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டோ மிரட்சி கொள்ளும் வயது அது. அப்படிப்பட்ட அறியாச் சிறுமிகளைக் கண்டால் அவர்களது மிரட்சியைப் போக்கி, தோளில் தட்டி அரவணைத்து அஞ்சாதே! என்று சொல்வதல்லவா மனிதத்தனம்.