சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க தொலைக்காட்சி சீரியல்கள் தான் காரணம் என ஒரு பேட்டியில் கூறி இருந்தார். கடந்த காலங்களை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சீரியல்களில் மிக அதிக அளவில் குடும்ப வன்முறை அதிகமாகக் காட்சிப்படுத்தப் படுகிறது எனவும், சீரியல்களில் வரும் வில்லன்கள், வில்லிகள் அனைவருமே சாதாரணமாகக் காண்பிக்கப்படுவதில்லை, வெறுப்பினாலும், குரோதத்தினாலும் சொந்த குடும்ப உறுப்பினர்களையே விசம் வைத்தும், கத்தியால் குத்தியும் கொள்பவர்களாகவும், சதா வேறு வேலைகள் எதுவுமின்றி சதித் திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பவர்களாகவுமே மிக மிக மோசமானவர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள். இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிதமிஞ்சி நாடு கெட்டுக் குட்டிச் சுவராதைத் தவிர வேறு பலன்கள் இல்லை. இப்படியான மோசமான தொலைக்காட்சி சீரியல்களைத் தடை செய்ய வேண்டும். என்று தன்னுடைய ஆதங்கத்தை கோபம் பொங்க அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.