இந்தமுறை 100 சதவிகித மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. நாம் இப்போதும் நமது தூர் வாரும் வேலைகளை மந்த கதியில் செய்து கொண்டுள்ளோம். 2015 ஆம் டிசம்பரில் வந்த பெருமழை சமயத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதில் வெளியேறிய அசுரத் தனமான மழை நீர் வரத்து வடிந்து கடலை நாட வழி வகையின்றி சென்னை முழுதும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் நுங்கம் பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், கீழ்பாக்கம், தாம்பரம், வில்லிவாக்கம் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகள், கடைகள், மால்கள், மருத்துவமனைகள், வியாபார கேந்திரங்கள், பன்னாட்டு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இண்டு, இடுக்குகள் விடாது புகுந்து புறப்பட்டு பெருநகரின் கழிவுகள் அனைத்தையும் கொடையாக வாரி வழங்கி விட்டு பல இடங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தேங்கி நின்றன.