முற்றிலுமாக மருத்துவரை மட்டுமே குறை சொல்வதற்கில்லை, சிடி ஸ்கேன் வசதி கூட அந்த மருத்துவமனையில் இல்லை என்றால் நாடு தாண்டி இங்கு சிகிச்சைக்காக வந்தவர்களின் நம்பிக்கையை என்னவென்று சொல்ல? அவர்கள் முன்பே தாங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போகும் மருத்துவமனை குறித்தும், அதன் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் அறிந்து கொண்டு இங்கே வந்திருக்க வேண்டாமா? இப்போது பாதி சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனை குறித்தும், அதன் நிர்வாகம் குறித்தும் இத்தனை குறை கூறத் தெரிந்தவர்கள் முன்பே அதைச் சோதித்த பின் இங்கே சிகிச்சைக்கு வருவது தானே முறை?! இவர்கள் இருவரில் குறை இரு தரப்பிலும் தான் இருப்பதாகத் தெரிகிறது. எது எப்படியாயினும் இந்தியாவுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக வந்திருக்கும் இமான், தனது பக்க விளைவுக் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டு நலமுடன் நாடு திரும்புவார் என்று நம்புவோமாக!