ஆரம்பத்தில் இதைப் பின்பற்றிய ஆட்டோ ட்ரைவர்கள, சில நாட்களிலேயே பழையபடி தங்கள் இஷ்டப்படி கட்டணத்தை நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டார்கள். வாடிக்கையாளர்களிடம் மீட்டரைப் போடுவதைப் போலப் போட்டவிட்டு கண்காணிப்பு அதிகாரிகள் கண்களை விட்டு மறைந்த பின்பு மறுபடியும் அணைத்து விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் வண்டியில் ஏறும்போதே மீட்டர் போட்டால் 50 ரூபாய் ஆகும், கூட இருபது ரூபாய் தந்துவிடுங்கள் என்பார்கள். ஆனால் மீட்டர் போடமாட்டார்கள். போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் இருப்பதைத் தூரத்திலிருந்துப் பார்த்துவிட்டு உடனே மீட்டரை போட்டுவிடுவார்கள். அந்த இடம் கடந்ததும் அதை அணைக்க மாட்டார்கள். இறங்கும்போது 30 ரூபாய் தான் வந்திருக்கும் ஆனால் நாம் 70 ரூபாய் தரவேண்டியிருக்கும்.