‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கனடாவில் ‘இயல் விருது’ பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்!

டொரண்டோ: ஜூன் 13 ம் தேதி டொரண்டோவில் ஹோட்டல் ராடிஸனில் நிகழ்ந்த ஒரு விழாவில் அந்த ஹோட்டலே களை கட்டியது. வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுத்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:47 am

உமா ஷக்தி.

டொரண்டோ: ஜூன் 13 ம் தேதி டொரண்டோவில் ஹோட்டல் ராடிஸனில் நிகழ்ந்த ஒரு விழாவில் அந்த ஹோட்டலே களை கட்டியது. வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை தேர்ந்தெடுத்து ‘இயல் விருது’ வழங்கிவருகிறது. கனடாவில் தமிழர்களுக்காக இயங்கிவரும் தமிழ் இலக்கிய தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது வழங்கும் விழாவில் தமிழ் எழுத்தாளர்களுடன் கனடா எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனருமான டேவிட் பெஸ்மோஸ்கிஸ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

ஒவ்வொரு விருதுக்கும் சில நிமிட அறிமுகமும், அதைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு, மூன்று நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா நேர ஒழுங்கோடு நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.  ஜெயமோகன் தமிழின் முக்கிய எழுத்தாளர் மட்டுமல்ல விமர்சகர், திரைத்துறையில் வசனகர்த்தா என்று பன்முகச் சிறப்புடையவர். விழாவில் ஜெயமோகன் பேசியபோது தன் வாழ்வில் நடந்து சில சம்பவங்களையும் அது தன்னை பாதித்தவிதமும், பெற்றோரின் மரணம், தான் எழுத்தாளனாக மாறிய சூழல் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையில் ஒரு கணத்தைக்கூட வீணாக்காமல் வாழும் விதம் பற்றிய அவரது சிறப்புரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அதன் பின் மற்ற சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ நூலுக்காக கதிர்பாரதிக்கும், ‘கனவுச் சிறை’ நாவலுக்காக எழுத்தாளர் தேவகாந்தனுக்கு, ’நஞ்சுண்டகாடு’ நாவலுக்காக் குணா கவியழகனுக்கும் ‘கூலித்தமிழ்’ நாவலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை கே.வி.சைலஜாவும், சுவர்ணவேல் ஈஸ்வரனும் பெற்றுக் கொண்டனர். சுந்தர ராமசாமி நினைவு விருந்தான ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வாசுகி கைலாசம் மற்றும் யுகேந்திரா ரகுநாதன் விருதுகள் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற உலகின் பல்வேறு பகுதியிலிருந்து தமிழர்கள் கலந்துகொண்டு விருது பெற்ற எழுத்தாளர்களை வாழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.