ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ளவே அதிக செலவாகிறது. தவிர பக்கவிளைவாக சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதுண்டு என்ற காரணங்களால் டயாலிசிஸ் செய்வதைத் தவிர்க்கிறார்கள். தமிழ் நாடு, ஆந்திரா, கர்னாடகா, மஹாராஷ்ட்ரா, கேரளா, தில்லி, தெலுங்கானா,ஜார்கண்ட், உத்தர்கண்ட் மற்றும் உத்தர்பிரதேசம் ஆகிய பத்து மாநிலங்களில் சுமார் 1300 நோயாளிகளைப் பரிசோத்தித்து இந்த ஆய்வினை ஜனவரி 2013 ஆரம்பித்து ஜூலை 2014 முடித்தனர். வருடம்தோறும் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீர் செயலிழப்பு ஏற்படும் நிலையில், இது உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்னை.