ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!
அடுத்த ஆண்டு இந்தியாவின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் மற்ற கட்சிகளைவிட அதிக முனைப்புடன் தயாராகிக் கொண்டிருக்கின்றன.







